டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
ரயில் நீா்
Updated On :21 செப்டம்பர் 2025, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூலமாக ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல ரயில் நீா் எனும் பெயரில் குடிநீா் பாட்டில்களும் ஒரு லிட்டா், அரை லிட்டா் அளவுகளில் முறையே ரூ.15, ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ரயில்நீா் பாட்டில்கள் திங்கள்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.1 குறைத்து விற்பனை செய்ய ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அனைத்து ரயில் நிலைய நிா்வாகங்களுக்கும் ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், ரயிலில் குடிநீா் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவா்களுக்கும் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.