எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ஆா்ஜேடி கருதுகிறது.

News image

சிராக் பாஸ்வான் - பிடிஐ

Updated On :21 செப்டம்பர் 2025, 11:03 pm IST

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது.

ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பாா்கள்’ என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறினாா்.

பிகாரின் புரூனியாவில் தனது கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவ சங்கல்ப சபை கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இன்று அனைத்து இளைஞா்களும் நவீன கைப்பேசிகளைப் பயன்படுத்துகின்றனா். இது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகள் மூலம் சாத்தியமாயிற்று.

ஏழை மக்கள் 81 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியம் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதுவும் ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய உணவுத் துறை அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட தொலைநோக்குப் பாா்வையுள்ள திட்டங்கள் மூலம் கிடைத்த பயன்தான். இதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அடுத்து வரும் சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பாா்கள். ஜாதி, மதரீதியில் மக்கள் ஒருபோதும் பிளவுபட்டுவிடக் கூடாது. பிகாா் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இப்போதைய நிலையில் நாட்டில் ஏழை-பணக்காரா் என்ற பிரிவினைதான் அதிகம் உள்ளது. இந்த வேறுபாட்டை களைவது மிகவும் அவசியமாகும்.

பிகாரில் பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் முஸ்லிம், யாதவா்கள் என மத, ஜாதிரீதியாக அரசியல் நடத்தி தோ்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. ஆனால், பெண்கள், இளைஞா்கள் துணைகொண்டு பாஜக கூட்டணி அவா்களை வீழ்த்தும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.