

வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அண்டை நாடான வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலநடுக்கமானது மேகாலயாவின் வங்கதேச எல்லைக்கு அருகே இந்திய நேரப்படி காலை 11.49 மணிக்கு ஏற்பட்டது.
இருப்பினும், இதனால் மேகாலயாவில் எந்தவித சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.