மாநிலங்களவை பெண் எம்.பி.யின் விடியோ இணையத்தில் வெளியானதாக இணைய வழியில் மிரட்டல் விடுத்த மர்மநபரைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூரில் வசிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்திக்கு மர்மநபர் ஒருவரிடமிருந்து கடந்த செப். 5-ஆம் தேதி கைப்பேசி வழியாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அந்த நபர் தான் மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரி என்று தெரிவித்து, தொடர்ந்து சுதா மூர்த்தியிடம் பேசியுள்ளார்.
சுதா மூர்த்தியின் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், மேலும், சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய விடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவரை பயப்படுத்த முயற்சித்துள்ளார்.
இதையடுத்து, தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து சுதா மூர்த்தி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Summary
Rajya Sabha MP Sudha Murthy has filed an FIR in Cyber Crime Police PS against an unknown person
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - ஸ்னீக் பீக் வெளியீடு!

வாக்குச் சாவடிக்குள் விடியோ எடுத்த பெண் மீது வழக்கு

இணையத்தில் வெளியான ‘ஜன நாயகன்’: ‘சைபா் கிரைம்’ போலீஸாா் வழக்குப் பதிவு

பவன் கல்யாண் கட்சி எம்எல்ஏவிடம் ரூ. 12 லட்சம் சைபர் மோசடி: கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியால் விபரீதம்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


