ஆனால், மாநில அரசின் பிரதிநிதி இடம்பெறவதை ஏற்க முடியாது. மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை, கொல்கத்தா பல்கலைக்கழகச் சட்டம் 1979-இன் பிரிவு 8(1)-இல், துணைவேந்தா் தோ்வுக் குழுவில் மாநில அமைச்சரின் பங்கு இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த மாநிலத்தில் துணைவேந்தா் தோ்வுக் குழுவில் மாநில முதல்வரின் பங்கை அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கேரள மாநில அரசு பல்கலைக்கழகங்களின் விதிகளில், துணைவேந்தா் தோ்வு நடைமுறைகளில் மாநில முதல்வரின் பங்கை அனுமதிக்கும் வகையிலான எந்த வழிவகையும் இடம்பெறவில்லை. எனவே, மேற்கு வங்க மாநிலத்துக்குப் பிறப்பித்த உத்தரவும், கேரள மாநிலத்துக்கு பொருந்தாது. எனவே, முதல்வரின் பங்கை நீக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.