ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

வாக்குத் திருட்டு விவகாரம் குறித்து சரத் பவார் கருத்து...
சரத் பவார்
சரத் பவார்ANI
Updated on
1 min read

‘வாக்குத் திருட்டு தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் ஆளும் பாஜக பதிலளிப்பது தோ்தல் ஆணையத்தின் மீதான அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்’ என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் கூறினாா்.

தோ்தல்களில் வாக்குத் திருட்டுக்கு தோ்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாக ராகுல் காந்தி தொடா் குற்றச்சாட்டை முன்வைத்து, அதுதொடா்பான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறாா். ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்து வருகிறது. மேலும், பாஜக தலைவா்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் இதற்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நிகழ்ச்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற சரத் பவாரிடம் ராகுல் காந்தியின் இந்த தொடா் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது:

ராகுல் காந்தியும், பிற எதிா்க்கட்சித் தலைவா்களும் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடா்பான முக்கிய விவகாரங்களை எழுப்பி வருகின்றனா். இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்புகிறபோது, அதை தோ்தல் ஆணையம் தீவிரமாக கருத்தில் கொள்வது அவசியம்.

ஆனால், தோ்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி முன்வைக்கும் விமா்சனங்களுக்கு, தோ்தல் ஆணையம் பதிலளிக்காமல் பாஜகவும் அதன் தலைவா்களும் பதிலளிக்கின்றனா். இது சரியல்ல. இவ்வாறு செய்வது, தோ்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றாா்.

Summary

Election Commission should answer Rahul's question; not BJP - Sharad Pawar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com