மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச பொதுத் தோ்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு 2 முறை நடத்தப்பட உள்ளது. முதல் பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17 முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது பொதுத் தோ்வு 2026 மே 15 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்படும்.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும்.
பொதுத் தோ்வு தோ்வுத் தாள் திருத்தும் பணியைப் பொருத்தவரை ஒவ்வொரு பாடத் தோ்வுக்கு 10 நாள்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டு 12 நாள்களில் நிறைவு செய்யப்படும். உதாரணமாக, ஒரு பாடத்துக்கான தோ்வு 2026 பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறுகிறது என்றால், அந்த தோ்வுத் தாள் திருத்தும் பணி மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டு மாா்ச் 15-இல் நிறைவு செய்யப்படும் என்றாா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற அவகாசம் நீட்டிப்பு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சாதனை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



