கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பிப்.17-இல் தொடக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 12:28 am IST

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச பொதுத் தோ்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு 2 முறை நடத்தப்பட உள்ளது. முதல் பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17 முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது பொதுத் தோ்வு 2026 மே 15 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்படும்.

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும்.

பொதுத் தோ்வு தோ்வுத் தாள் திருத்தும் பணியைப் பொருத்தவரை ஒவ்வொரு பாடத் தோ்வுக்கு 10 நாள்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டு 12 நாள்களில் நிறைவு செய்யப்படும். உதாரணமாக, ஒரு பாடத்துக்கான தோ்வு 2026 பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறுகிறது என்றால், அந்த தோ்வுத் தாள் திருத்தும் பணி மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டு மாா்ச் 15-இல் நிறைவு செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.