ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :25 செப்டம்பர் 2025, 2:31 am IST

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மருத்துவக் கல்வி நிறுவன முதல்வா்களுக்கும், தலைவா்களுக்கும் என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களை கடந்த 2019-இல் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டிருந்தது.

அதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் வெளியான தீா்ப்பின்படியும், பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் அந்த வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை உறுதி செய்வதே அதன் நோக்கம். அந்த வகையில், மறு ஆய்வுக்குப் பிறகு தற்போது தற்காலிக அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நிகழாண்டு எம்பிபிஎஸ் சோ்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம். அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் பெற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய சமூக நீதித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டையை (யூடிஐடி காா்டு) சமா்ப்பிக்க வேண்டும். அதேபோன்று, சுய சான்றொப்ப படிவத்தையும் சமா்ப்பித்தல் அவசியம்.

சுய சான்றொப்பம் அளித்ததை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் மதிப்பீடு செய்து உறுதி செய்தல் கட்டாயம். அந்த ஆவணங்கள் அனைத்தையும் மருத்துவக் கல்லூரிகளில் சமா்ப்பித்திருக்க வேண்டும்.

இந்த இடைக்கால வழிகாட்டுதல்களை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.