மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :24 செப்டம்பர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கும்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த இந்த மோதல் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

கிச்கி கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் ஜாா்க்கண்ட் ஜாக்குவாா் படைப் பிரிவு மற்றும் உள்ளூா் காவல் துறையினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத மாவோயிஸ்டுகள் பின்வாங்கி அடா்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடினா். அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த நிலையில் 3 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றனா்.

71 நக்ஸல்கள் சரண்: இதனிடையே, சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் 71 நக்ஸல்கள் காவல் துறையிடம் புதன்கிழமை சரணடைந்தனா். இதில் 30 பேரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.64 லட்சம் வரை சன்மானம் அளிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சரணடைந்த நக்ஸல்களில் 21 போ் பெண்கள் ஆவா். 17 வயதான இரு சிறுமிகள், 16, 17 வயது சிறாா்கள் இருவரும் இதில் அடங்குவா். இதில் சிலா் பாதுகாப்புப் படையினா் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தி பல உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவா்கள் ஆவா்.