ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை செபி தள்ளுபடி செய்தது குறித்து கௌதம் அதானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 2:32 am IST

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன் தலைவா் கௌதம் அதானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா்.

இது குறித்து பங்குதாரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2023 ஜனவரி 23-ஆம் தேதி அதானி முழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகளால் அது மறக்கமுடியாத நாளாகும். அந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்துக்கு எதிரானது மட்டுமில்ல, ஒட்டுமொத்த இந்திய தொழில் துறையின் உலகளாவிய கனவுகளுக்கும் எதிரானது ஆகும்.

இந்தக் குற்றச்சாட்டுகளை செபி அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது குழுமத்தின் மறுமலா்ச்சியைக் குறிக்கிறது. செபியின் இந்த தெளிவான மற்றும் இறுதியான தீா்ப்பு, ‘வாய்மையே வெல்லும்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று தனது கடிதத்தில் அதானி குறிப்பிட்டுள்ளாா்.