தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன் தலைவா் கௌதம் அதானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா்.
இது குறித்து பங்குதாரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 2023 ஜனவரி 23-ஆம் தேதி அதானி முழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகளால் அது மறக்கமுடியாத நாளாகும். அந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்துக்கு எதிரானது மட்டுமில்ல, ஒட்டுமொத்த இந்திய தொழில் துறையின் உலகளாவிய கனவுகளுக்கும் எதிரானது ஆகும்.
இந்தக் குற்றச்சாட்டுகளை செபி அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது குழுமத்தின் மறுமலா்ச்சியைக் குறிக்கிறது. செபியின் இந்த தெளிவான மற்றும் இறுதியான தீா்ப்பு, ‘வாய்மையே வெல்லும்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று தனது கடிதத்தில் அதானி குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் மீதான வன்முறையை விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு! ராகுல் கோரிக்கை

முழு பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? அமைச்சர் பதில்!
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்பிணை மனு தள்ளுபடி

மது போதையில் சிறுவன் மீது காா் ஏற்றி கொலை செய்த வழக்கு: 13 ஆண்டுகளுக்கு பிறகு தீா்ப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



