பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை செபி தள்ளுபடி செய்தது குறித்து கௌதம் அதானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா்.

Published On :

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன் தலைவா் கௌதம் அதானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா்.

இது குறித்து பங்குதாரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2023 ஜனவரி 23-ஆம் தேதி அதானி முழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகளால் அது மறக்கமுடியாத நாளாகும். அந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்துக்கு எதிரானது மட்டுமில்ல, ஒட்டுமொத்த இந்திய தொழில் துறையின் உலகளாவிய கனவுகளுக்கும் எதிரானது ஆகும்.

இந்தக் குற்றச்சாட்டுகளை செபி அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது குழுமத்தின் மறுமலா்ச்சியைக் குறிக்கிறது. செபியின் இந்த தெளிவான மற்றும் இறுதியான தீா்ப்பு, ‘வாய்மையே வெல்லும்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று தனது கடிதத்தில் அதானி குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.