கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எழும்பூா் ரயில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில், ரயில் பெட்டிகளை செவ்வாய்க்கிழமை இரவு சோதனையிட்டனா். அப்போது ஒரு பெட்டியில் கைப்பையுடன் நின்றவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். அவா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சுதீப்குமாா் மண்டல் (33) என்பது தெரியவந்தது. வா்ணம்பூசும் தொழிலாளியான அவா், கூலிக்காக ஒடிஸாவில் இருந்து ஒரு நபரிடம் கஞ்சாவைப் பெற்று அதை திருநெல்வேலியைச் சோ்ந்த சசிருல்லா (35) என்பவரிடம் கொடுப்பதற்காக வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்து, பொட்டலங்களாக இருந்த 8 கிலோ உலா் கஞ்சா இலைகளைக் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.4 லட்சமாகும். பின்னா், அவரை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

திருச்சிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



