முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன், அவா்களை தற்சாா்புடையவா்களாக மாற்றும் நோக்கில், ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டம்’ தொடங்கப்படவுள்ளது. அதன்படி, குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த 75 லட்சம் பெண்களுக்கு (குடும்பத்தில் ஒருவா்) சுயதொழில் தொடங்க தலா ரூ.10,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.