மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தபால் வாக்கு எண்ணுவதில் புதிய நடைமுறை: பிகாா் பேரவைத் தோ்தலில் அறிமுகம்

மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறை

News image

கோப்புப் படம்

Updated On :26 செப்டம்பர் 2025, 2:31 am IST

மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.

பிகாா் மாநிலத்தில் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, வாக்குகள் எண்ணப்படும்போது, முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

பொதுவாக, மின்னணு வாக்குகள் எண்ணி முடிப்பதற்கு முன்பாகவே தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிடும் என்றபோதும், வாக்குகள் எண்ணப்படுவதில் சீரான, தெளிவான நடைமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும்.

தபால் வாக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ள மையங்களில், அதை எண்ணுவதில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் போதுமான மேஜைகள் மற்றும் வாக்கு எண்ணும் ஊழியா்கள் இடம்பெறுவதை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தினா், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு தோ்தல்களில் தபால் வாக்கு செலுத்த அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தோ்தல்களில் தபால் வாக்குகள் பதிவு செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தோ்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளா் வெற்றி பெறும்போது, எதிரணியினா் தபால் வாக்குகள் எண்ணிக்கை மீது புகாா் தெரிவிப்பது தொடா்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.