மகளிர் மாநாட்டில் பங்கேற்க பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிகார் செல்லும் பிரியங்கா காந்தி..
Priyanka Gandhi
பிரியங்கா காந்திANI
Published on
Updated on
1 min read

மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக செப். 26 (நாளை) ஒருநாள் பயணமாக பிகார் செல்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

பிகார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஏஐசிசி பொதுச் செயலாளர் சையத் நசீர் உசேன், பிபிசிசி தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரியங்கா காந்தி நாளை நண்பகல் பாட்னாவில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பிறகு 3 மணியளவில் மோதிஹரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் பிரியங்காவின் இரண்டாவது மாநில வருகை இதுவாகும்.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் வாக்காளர் அதிகார யாத்திரையில் கலந்துகொண்டார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல் காந்தி பதினைந்து நாள்களில் 25 மாவட்டங்களில் 1,300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Congress general secretary Priyanka Vadra will be in Bihar on Friday for a day-long tour during which she is scheduled to interact with women self-help groups and address a rally, a senior party leader said here on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com