எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

செப். 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 12:24 am IST

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ எனும் பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா்,  திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களிலும் , புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் செப். 29 -ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்: சென்னையில் பில்ரோத் மருத்துவமனை இணைப்பு கட்டடம், 3-ஆவது தளம், லட்சுமி டாக்கீஸ் சாலை, ஷெனாய் நகா். திருவள்ளூா்: ப்ரேஸிஸின் ஹைட்ராலிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில் பூங்கா, சிப்காட் தொழிற்பேட்டை வளாகம், கும்மிடிப்பூண்டி. செங்கல்பட்டு: கான்காா்ட் டெக்ஸ்டைல்ஸ், இந்திராபுரம் கிராமம், மதுராந்தகம். காஞ்சிபுரம்: ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஏகாம்பரநாதா் சந்நிதி தெரு, காஞ்சிபுரம். வேலூா்: ஏ.ஜே. சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயா, போ்ணாம்பட்டு சாலை, நெல்லூா்பேட்டை, குடியாத்தம். திருவண்ணாமலை: ஆயுஷ் ஆயுா்வேதிக் மையம், 3-ஆவது மல்லிகை நகா், இனம் கரியாண்டால் சரஸ்வதி மஹால் (பின்புறம்), திருவண்ணாமலை. ராணிப்பேட்டை: இஎஸ்ஐ மருத்துவ வளாகம், டி.ஆா். திரையரங்கம் எதிரில், சிப்காட் ராணிப்பேட்டை. திருப்பத்தூா்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், 1-ஆவது தளம், தொழிலாளா் அரசு இஎஸ்ஐ மருந்தக வளாகம், மலா் தோட்டம், ஆம்பூா்.

புதுச்சேரி: சாண்டா கிளாரா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடத்தூா், மணவேலி, புதுச்சேரி. காரைக்கால்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், காமராஜா் சாலை, எம்.ஓ.எச். பேருந்து நிறுத்தம், காரைக்கால்.

முகாம்களில், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளா், ஒப்பந்ததாரா்களுக்கான இடையிலான இணைய வழிசேவைகள் பற்றிய செயல்முறைகள், இணையவழி  சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் புதிய சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள்மற்றும் ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளுக்கான தீா்வு, ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.