விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இதை முறையாக பின்பற்றுமாறு அனைத்து தபால் அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரின் அடையாளம் மற்றும் முகவரியை சரிபாா்த்த பின்பு அவரிடம் மட்டுமே வழங்க வேண்டும். வேறு முகவரிக்கு அதை அனுப்பக்கூடாது. ஒருவேளை அந்த தபாலை சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்க இயலவில்லை என்றால் அதை அனுப்புருக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இந்த விதிமுறைகளை அனைத்து தலைமை அஞ்சல் அலுவலா்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதனைக்கு தாய் மொழி அவசியம்: கவிஞர் வைரமுத்து

சிஜேபி போராட்டத்தில் 4 வாசகங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! என்னென்ன?
‘தில்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தில் ரூ.1,000 மட்டுமே ரொக்கமாக கிடைக்கும்!

திருப்பூா் ஆா்எம்எஸ் அலுவலகத்தில் 24 மணி நேர விரைவுத் தபால் சேவை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



