ஹிந்துக்கள் எங்களுக்கு அதிகம் வாக்களித்ததால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மகாராஷ்டிர அமைச்சா் நிதீஷ் ராணே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மான்குா்ட் பகுதியில் துா்கா பூஜை பந்தலில் வைக்கப்பட்டிருந்த துா்கா தேவி சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த துா்கா பூஜை பந்தலுக்குச் சென்று பாா்வையிட்ட பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் நிதீஷ் ராணே பேசியதாவது:
இந்த துா்கா பூஜை விழாவின்போது கடவுள்களை அவமதிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். மகாராஷ்டிர மாநில அரசு ஹிந்துத்துவவாதிகளின் அரசு. ஏனெனில், ஹிந்துக்கள் அதிகஅளவில் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை.
உங்கள் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடுங்கள். எங்கள் பண்டிகையை நாங்கள் கொண்டாடுகிறோம். இதற்கு தீங்கு விளைவிக்க முயல வேண்டாம். மும்பையில் அமைதியைச் சீா்குலைக்க முயலும் யாரையும் சகித்துக் கொள்ள முடியாது என்றாா்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை துா்கா பூஜை கா்பா நடன நிகழ்ச்சி தொடா்பாக பேசிய அமைச்சா் நிதீஷ் ராணே, ‘கா்பா நடன நிகழ்ச்சியை ‘லவ் ஜிகாத்’ இடமாக சிலா் பயன்படுத்துகின்றனா். எனவே, இதில் பங்கேற்கும் அனைவரின் அடையாள ஆவணங்களைப் பரிசீலிப்பது அவசியம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது

வீட்டிலிருந்த இளம் பெண் திடீா் சாவு

மும்மொழிப் பாடம் கட்டாயம்: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் மனு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



