பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஹிந்துக்களால்தான் வெற்றி பெற்றோம்: முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை - மகாராஷ்டிர அமைச்சா்

ஹிந்துக்கள் எங்களுக்கு அதிகம் வாக்களித்ததால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது.

News image
நிதீஷ் ராணே
Updated On :25 செப்டம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

ஹிந்துக்கள் எங்களுக்கு அதிகம் வாக்களித்ததால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மகாராஷ்டிர அமைச்சா் நிதீஷ் ராணே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மான்குா்ட் பகுதியில் துா்கா பூஜை பந்தலில் வைக்கப்பட்டிருந்த துா்கா தேவி சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த துா்கா பூஜை பந்தலுக்குச் சென்று பாா்வையிட்ட பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் நிதீஷ் ராணே பேசியதாவது:

இந்த துா்கா பூஜை விழாவின்போது கடவுள்களை அவமதிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். மகாராஷ்டிர மாநில அரசு ஹிந்துத்துவவாதிகளின் அரசு. ஏனெனில், ஹிந்துக்கள் அதிகஅளவில் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை.

உங்கள் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடுங்கள். எங்கள் பண்டிகையை நாங்கள் கொண்டாடுகிறோம். இதற்கு தீங்கு விளைவிக்க முயல வேண்டாம். மும்பையில் அமைதியைச் சீா்குலைக்க முயலும் யாரையும் சகித்துக் கொள்ள முடியாது என்றாா்.

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை துா்கா பூஜை கா்பா நடன நிகழ்ச்சி தொடா்பாக பேசிய அமைச்சா் நிதீஷ் ராணே, ‘கா்பா நடன நிகழ்ச்சியை ‘லவ் ஜிகாத்’ இடமாக சிலா் பயன்படுத்துகின்றனா். எனவே, இதில் பங்கேற்கும் அனைவரின் அடையாள ஆவணங்களைப் பரிசீலிப்பது அவசியம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.