மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யார் இந்த சைதன்யானந்தா? ஏற்கெனவே தில்லியில் 5 பாலியல் வழக்குகள்!

தில்லியில் சைதன்யானந்தா சரஸ்வதி மீது ஏற்கெனவே தில்லியில் 5 பாலியல் வழக்குகள் பதிவு

News image
சைதன்யானந்தா சரஸ்வதி
Updated On :25 செப்டம்பர் 2025, 7:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருக்கும் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது, மாணவிகள் பாலியல் புகார் கூறியிருக்கும் நிலையில், அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது இப்போதுதான் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது போல தகவல்கள் வெளியானது. அவர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அவர் மீது இதுவரை 5 வழக்குகள் இருப்பதாகவும், அதில் பாலியல் வழக்குகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மாணவிகள் சிலர் வசந்த் கஞ்ச் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிறகு பிணையில் வெளியே வந்தவர், மீண்டும் அதே நிறுவனத்தில் பணியைத் தொடர்ந்துள்ளார்.

ஏற்கனவே வழக்குகளை சந்தித்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில், தற்போது 17 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்து தலைமறைவாகியிருக்கிறார்.

இவர் போலியான கார் நம்பர் பலகைகளை பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.