நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக் வன்முறையைத் தொடர்ந்து ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

கல்வியாளர் சோனம் வாங்சுக்

Updated On :26 செப்டம்பர் 2025, 10:59 am

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் தலைமையில் அங்குள்ள மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, லே நகரில் வன்முறை வெடித்ததால் காவல் படைகள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், மோதல்களில் சுமார் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறைக்கு, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக்கின் தூண்டுதல்தான் காரணம் என நேரடியாகக் குற்றம்சாட்டிய மத்திய உள் துறை அமைச்சகம், நேற்று (செப். 25) அவரது ‘லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (எஸ்இசிஎம்ஓஎல்)’ என்ற கல்வி அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று (செப். 26) மதியம் 2.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, லே வன்முறைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாக சோனம் வாங்சுக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Academic and climate activist Sonam Wangchuk has been arrested after a protest demanding statehood for Ladakh turned violent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.