தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் கார் விபத்தில் 5 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில், சனிக்கிழமையில் தார் காரில் வேகமாக 6 பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில், காரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
உயிரிழந்த ஐவரில் இருவர் சட்டப்படிப்பு மாணவர்கள் என்றும், 2 பேர் விளம்பர வணிகம் படிப்பும் படித்து வந்துள்ளனர். மேலும், உயிரிழந்த பெண்களில் ஒருவர், நீதிபதியின் மகள் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
5 Dead As Speeding Thar Loses Control, Hits Divider On Gurugram Highway
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









