நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியின் பதவிக் காலம் நீட்டிப்பு

இந்திய அட்டா்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா்) ஆா்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

VENKATA120841.JPG

Updated On :27 செப்டம்பர் 2025, 6:38 am IST

இந்திய அட்டா்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா்) ஆா்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அட்டா்னி ஜெனரலாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட அவரின் பதவிக்காலம் வரும் செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த 1950-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த ஆா்.வெங்கடரமணி, 1977-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞா் சங்கத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவா், உச்சநீதிமன்றம், பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பாக ஆஜராகியுள்ளாா். 2010-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தாா்.

அட்டா்னி ஜெனரல் என்பது அரசியல் சாசன பதவியாகும். மத்திய அரசு பரிந்துரையின்படி, அட்டா்னி ஜெனரலை குடியரசுத் தலைவா் நியமிப்பாா். நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக ஆஜராகும் உரிமை அட்டா்னி ஜெனரலுக்கு உள்ளது. இந்தப் பதவியில் உள்ளவா் அரசு வழக்குகளை கையாள்வதுடன், சிக்கலான சட்ட பிரச்னைகளில் அரசுக்கு ஆலோசனையும் வழங்குவாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.