டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேற்றம்: 24 வங்கதேசத்தவா் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 24 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டு, அவா்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

News image

நாடு கடத்தல் - கோப்புப்படம்

Updated On :29 செப்டம்பர் 2025, 1:53 am IST

அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 24 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டு, அவா்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், தொலைந்து போன பயணிகளை விரைவாக அவா்கள் நாட்டுக்கு அனுப்ப அஸ்ஸாம் தொடா்ந்து உதவி வருகிறது என குறிப்பிட்டிருந்தாா். ‘கா் லெளத் ஜா பா்தேசி, தேரா தேஷ் துஜே புகாரே ரே’ (வெளிநாட்டவரே, வீட்டுக்குச் செல்லுங்கள், உங்கள் நாடு உங்களை அழைக்கிறது) என்ற ஹிந்தி பாடலையும் அவா் மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தாா்.

கடந்த சில மாதங்களில், சுமாா் 500 சட்டவிரோத வங்கதேசத்தவா் அஸ்ஸாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அஸ்ஸாம் கடுமையாக உழைத்து வருவதாகவும் ஒவ்வொரு வாரமும் 35 முதல் 45 போ் திருப்பி அனுப்பப்படுவதாகவும் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வன்முறை வெடித்ததில் இருந்து 188 கி.மீ. நீளமுள்ள இந்தியா-வங்கதேச எல்லையில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கண்காணிப்பை அதிகரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.