பாதுகாப்பான கைகளில் இந்திய நண்பர்கள்: ஈரான் உறுதி
ஈரானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா | ஈரான்
X | Iran in India
இந்தியா | ஈரான்
X | Iran in India
ஈரானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பதிலடியாக ஈரானும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், "இந்திய நண்பர்கள் மிகவும் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், கவலை வேண்டாம்" என இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையை வழியே அனுமதிக்க முடியாது எனவும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இருப்பினும், இந்தியா, சீனா, ரஷியா, இராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவிகித அளவிலான பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக, கடந்த மாதத்திலிருந்து மிகச் சில கப்பல்களே அனுமதிக்கப்படுவதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் எரிசக்தி விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...