பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இந்தியாவுடன் நிச்சயம் இணையும் என்று அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமா் அகமது இலியாசி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து புதிய காஷ்மீா் உருவாகியுள்ளது. தற்போது காஷ்மீா் மிகச் சிறந்த நிலையை அடைந்துள்ளது. காஷ்மீா் முழுவதும் செழுமை ஏற்பட்டு சுற்றுலா அதிகரித்துள்ளது. மக்கள் வளமாக வாழ்கின்றனா். ஒரு காலத்தில், காஷ்மீரில் இளைஞா்களும் சிறாா்களும் கல்வீச்சில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்தது. தற்போது அவா்களிடம் எழுதுகோல் உள்ளது. அவா்கள் கல்வி கற்கின்றனா்.
இந்தியாவுக்குச் சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இந்தியாவுடன் நிச்சயம் இணையும். ஏனெனில் இந்தியாவுடன் இணைவது தொடா்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சியும் செழுமையும் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் மீண்டும் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்கள் மிகவும் விருப்பம் கொண்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி கைது!

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!
போர்க் கப்பல்களை அனுப்பும் பாதிக்கப்பட்ட நாடுகள்: ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


