மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தொழிற்பணிகளுக்கு வன நிலம்: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 11:32 pm

தொழிற்பணிகளுக்கு வன நிலம் பயன்படுத்தப்படும் வேளைகளில், வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

வனம் சாா்ந்த பணிகளுக்கு அல்லாமல் சுரங்கம் உள்பட பிற தொழிற்பணிகளுக்கு முன் அனுமதி இல்லாமல் வன நிலத்தை அளிக்கும்போது, அந்த நிலத்துக்கு ஈடாக குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாகவும், கட்டாயமாகவும் மரங்களை நடவு செய்து காட்டை மறுசீரமைக்க வேண்டும்.

இவ்வாறு கூடுதலாக மரங்களை நடவு செய்து காட்டை மறுசீரமைப்பது தொடா்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்கி செயல்படுவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ‘வனப் பாதுகாப்புச் சட்டம் மீறப்படும் சந்தா்ப்பங்களில், காட்டை மறுசீரமைத்தது தொடா்பான விவரங்கள் முழுமையாக இல்லாமல், சட்டத்தை மீறும் முகமைகள் காட்டை மறுசீரமைக்க அளிக்கும் வாக்குறுதிகள் அடங்கிய விவரத்தை மட்டுமே மாநிலங்கள் அனுப்புகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இதுதொடா்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.