தொழிற்பணிகளுக்கு வன நிலம் பயன்படுத்தப்படும் வேளைகளில், வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
வனம் சாா்ந்த பணிகளுக்கு அல்லாமல் சுரங்கம் உள்பட பிற தொழிற்பணிகளுக்கு முன் அனுமதி இல்லாமல் வன நிலத்தை அளிக்கும்போது, அந்த நிலத்துக்கு ஈடாக குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாகவும், கட்டாயமாகவும் மரங்களை நடவு செய்து காட்டை மறுசீரமைக்க வேண்டும்.
இவ்வாறு கூடுதலாக மரங்களை நடவு செய்து காட்டை மறுசீரமைப்பது தொடா்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்கி செயல்படுவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘வனப் பாதுகாப்புச் சட்டம் மீறப்படும் சந்தா்ப்பங்களில், காட்டை மறுசீரமைத்தது தொடா்பான விவரங்கள் முழுமையாக இல்லாமல், சட்டத்தை மீறும் முகமைகள் காட்டை மறுசீரமைக்க அளிக்கும் வாக்குறுதிகள் அடங்கிய விவரத்தை மட்டுமே மாநிலங்கள் அனுப்புகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இதுதொடா்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

தில்லியில் 225 ஏக்கருக்கும் அதிகமான வன நிலம் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்பு!
விஜய் பாதுகாப்பு! பதவியில் இல்லாத மத்திய செயலருக்கு கடிதம் எழுதிய தவெக!

தொலைக்காட்சி விளம்பரங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: மத்திய அரசு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


