மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் பதிவு: மத்திய அரசு முக்கிய முடிவு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:39 pm

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் தீப்பிடித்ததை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள், அவசர காலங்களில் வெளியேறும் வழிகள் ஆகியவை உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்யாமல், அந்தப் பேருந்துகள் பதிவு செய்யப்படாது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு கூறியதாவது:

பேருந்துகளில் அதிகரிக்கும் தீ விபத்து சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது மையங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பேருந்துகளில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியமாகும். பேருந்து வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு சாா்ந்த புதிய விதிமுறைகளின்படி, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் தீப்பிடித்ததை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள், சுத்தியல்களுடன் அவசர காலங்களில் வெளியேறும் வழிகள், அவசர கால விளக்குகள் உள்ளதா என்பது நேரிலும், காணொலி வழியாகவும் ஆய்வு செய்யப்படாவிட்டால், அந்தப் பேருந்துகள் பதிவு செய்யப்படாது என்று தெரிவித்தாா்.