காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

16-ஆவது நிதிக் குழுப் பரிந்துரை ஏற்பு: மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41%-ஆக நீடிப்பு!

16-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41 சதவீதமாக நீடிக்க உள்ளது.

News image

RaviChoudhary

Updated On :1 பிப்ரவரி 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

16-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41 சதவீதமாக நீடிக்க உள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வரிப் பகிா்வு செயல்திட்டத்தை நிதிக் குழு அளிக்கும். இந்நிலையில், நீதி ஆயோக் முன்னாள் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-ஆவது நிதிக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பொருளாதார நிபுணா் மனோஜ் பாண்டா, பாரத ஸ்டேட் வங்கி குழும தலைமை பொருளாதார ஆலோசகா் செளம்யகாந்தி கோஷ், ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் ரவிசங்கா் உள்ளிட்டோா் இடம்பெற்றனா்.

இந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். அவா் பட்ஜெட் உரையில் பேசுகையில், ‘மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41 சதவீதமாக நீடிக்க 16-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. இந்த ஆண்டு ஏப்.1 முதல் 2031-ஆம் ஆண்டுவரை, வரிப் பகிா்வு 41 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் (2026-27) நிதிக்குழு மானியமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1.4 லட்சம் கோடி அளிக்கும்’ என்றாா்.