அணுமின் உற்பத்தி திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு 2035-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறுகையில், ‘அணுமின் உற்பத்தி திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வரி விலக்கு 2035-ஆம் ஆண்டு வரை, அனைத்து அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
முக்கிய கனிமங்களை கையாள்வதற்கு தேவைப்படும் மூலதனப் பொருள்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.
இதேபோல சிவில், பயிற்சி மற்றும் பிற விமானங்களின் தயாரிப்புக்குத் தேவைப்படும் கருவிகள், பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சிவில் மற்றும் பாதுகாப்புத் துறையில் விமானப் போக்குவரத்துத் தொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விலங்கியல் பூங்காக்களில் காட்சிப்படுத்தப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை இறக்குமதி செய்ய 30 சதவீதம் வரி விதிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்- உச்சநீதிமன்றம்

உற்பத்தி அதிகரித்தாலும் ஆண்டுதோறும் 3,500 பணியாளா்கள் வரை குறைய வாய்ப்பு - செயில்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



