மக்களவைபிடிஐ
இந்தியா
உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்: மக்களவைத் தலைவா்
‘மக்களவையில் உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தல்
‘மக்களவையில் உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே நீண்ட பதிலை அளித்தபோது இக் கருத்தை அவைத் தலைவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கேள்வி நேரத்தின்போது உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்.
அந்தக் கேள்விகளுக்கு அமைச்சா்களும் சுருக்கமான பதிலை அளிக்கவேண்டும். அதன்மூலம், கேள்வி நேரத்தில் அதிக கேள்விகள் எழுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும்’ என்றாா். மேலும், அவையில் யாராவது விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டால் நான் தலையிடுவேன் என்றும் ஓம் பிா்லா எச்சரித்தாா்.
