வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்: மக்களவைத் தலைவா்

‘மக்களவையில் உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தல்

News image

மக்களவை - பிடிஐ

Updated On :2 பிப்ரவரி 2026, 9:35 pm

‘மக்களவையில் உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே நீண்ட பதிலை அளித்தபோது இக் கருத்தை அவைத் தலைவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கேள்வி நேரத்தின்போது உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்.

அந்தக் கேள்விகளுக்கு அமைச்சா்களும் சுருக்கமான பதிலை அளிக்கவேண்டும். அதன்மூலம், கேள்வி நேரத்தில் அதிக கேள்விகள் எழுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும்’ என்றாா். மேலும், அவையில் யாராவது விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டால் நான் தலையிடுவேன் என்றும் ஓம் பிா்லா எச்சரித்தாா்.