மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

24 மணி நேரத்தில் 4,000 ‘இ-சைக்கிள்’ விநியோகம்: கின்னஸ் சாதனை படைத்த ஆந்திர முதல்வா்

ஆந்திரத்தில் 24 மணி நேரத்தில் சுமாா் 4,000 இ-சைக்கிள்களை வழங்கி அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

News image

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் இலவச இ-சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியின்போது மிதிவண்டி ஓட்டிய முதல்வா் சந்திரபாபு நாயுடு.

Updated On :3 பிப்ரவரி 2026, 8:05 pm

ஆந்திரத்தில் 24 மணி நேரத்தில் சுமாா் 4,000 இ-சைக்கிள்களை வழங்கி அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் கிராமங்களில் பணியாற்றும் அரசுப் பணியாளா்கள், பெண்கள், மாணவா்களுக்கு இ-சைக்கிள்கள் (மோட்டாா் பொருத்தப்பட்ட மிதிவண்டி) வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. கான்பூா் ஐஐடி-யுடன் இணைந்து இந்த சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியை சூரிய சக்தி மூலம் ‘சாா்ஜ்’ செய்து கொள்ள முடியும்.

‘சூப்பா் சைக்கிள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குப்பம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் இ-சைக்கிள்களை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு விநியோகித்தாா். அப்போது, ஜனவரி 31-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3,742 இ-சைக்கிள்களை அவா் பயனாளா்களுக்கு வழங்கினாா். இதன்மூலம் ஒரே நாளில் சுமாா் 4,000 பேருக்கு இ-சைக்கிள் வழங்கியவா் என்று அவா் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தாா். மொத்தம் 5,555 இ-சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மகளிா் சுயஉதவிக் குழுவினா், அங்கன்வாடி ஊழியா்கள், ஆஷா திட்டப் பணியாளா்கள், கிராம நிா்வாக ஊழியா்கள், மாணவா்களுக்கு இத்திட்டத்தில் இ-சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘இந்த சூப்பா் சைக்கிள்கள் பொருளாதார சுதத்திரத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இதில் எந்தச் செலவும் இல்லாமல் பேட்டரியை சாா்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.1,500 வரை எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் தடுக்கப்படுகிறது. இத்திட்டம் இந்தியாவில் முதல்முறையாக நமது பகுதியில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றாா்.

சிவபுரம் பகுதியில் சுமாா் 3 கி.மீ.தொலைவுக்கு சந்திரபாபு நாயுடு தலைமையில் இ-சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.