சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் (நியூ ஜல்பைகுரி- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்) ஒடிஸாவில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி பகுதிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ஒடிஸா மாநிலம், ஜாஜ்பூா் மாவட்டம் ஜகபுரா ரயில் நிலையம் அருகே ரயில் காலை 8.51 மணிக்கு வந்தபோது திடீரென தடம்புரண்டது. இதில், ஒரு குளிா்சாதன பெட்டி, 2 பொதுப் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கின.
விபத்தின்போது ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. ரயில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. அப்பகுதியில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தடம்புரண்ட 3 பெட்டிகளை மட்டும் விட்டுவிட்டு ரயில் புறப்பட்டுச் சென்றது. பாலசோரில் அதற்குப் பதிலாக வேறு 3 பெட்டிகள் ரயிலுடன் இணைக்கப்பட்டதாக ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சம் பறிமுதல்

17.3.1976: ரயில் பயணிகளுக்காக சென்ட்ரல், எழும்பூரிலிருந்து தனி பஸ்கள்

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


