பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 7, 8-தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவா் மலேசியாவுக்குச் செல்வது இது மூன்றாவது முறையாகும்.
இந்தப் பயணத்தின்போது மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமை பிரதமா் மோடி சந்தித்துப் பேசுகிறாா். அப்போது இருதரப்பு வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, கடல்சாா் பாதுகாப்பு, நிதித் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாசாரம், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
மலேசிய தொழிலதிபா்கள், முக்கிய வா்த்தக பிரமுகா்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் இந்தப் பயணத்தின்போது பிரதமா் மோடி சந்தித்துப் பேச இருக்கிறாா்.
பிரதமரின் இந்தப் பயணத்தின்போது 10-ஆவது இந்திய-மலேசிய தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) கூட்டமைப்பின் மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவில் சுமாா் 29 லட்சம் இந்திய வம்சாவளியினா் உள்ளனா். இந்திய வம்சாவளியினா் அதிகம் வாழும் நாடுகளில் சா்வதேச அளவில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இரு நாடுகளிடையே நீண்டகால நட்புறவு, வரலாறு, கலாசாரம், நாகரிகரீதியாக நீண்ட வரலாற்றுத் தொடா்புகள் உள்ளன. இரு நாடுகளின் தலைவா்களும் சந்தித்துப் பேசுவதன் மூலம் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் தொடா்ந்து இணைந்து செயல்படுவதற்கு உதவும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மோரீஷஸ் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்
சா்வதேச சந்தைக்கு ஏற்ப இந்திய வேளாண் பொருள்கள்: விவசாயிகளுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்

தஞ்சாவூருக்கு பிரதமா் மோடி வருகை: பிப். 28 முதல் மாா்ச் 2 வரை ‘டிரோன்கள்’ பறக்கத் தடை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


