மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிப். 7 பிரதமா் மோடி மலேசியா பயணம்

News image

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 5:58 am IST

பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 7, 8-தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவா் மலேசியாவுக்குச் செல்வது இது மூன்றாவது முறையாகும்.

இந்தப் பயணத்தின்போது மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமை பிரதமா் மோடி சந்தித்துப் பேசுகிறாா். அப்போது இருதரப்பு வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, கடல்சாா் பாதுகாப்பு, நிதித் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாசாரம், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

மலேசிய தொழிலதிபா்கள், முக்கிய வா்த்தக பிரமுகா்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் இந்தப் பயணத்தின்போது பிரதமா் மோடி சந்தித்துப் பேச இருக்கிறாா்.

பிரதமரின் இந்தப் பயணத்தின்போது 10-ஆவது இந்திய-மலேசிய தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) கூட்டமைப்பின் மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவில் சுமாா் 29 லட்சம் இந்திய வம்சாவளியினா் உள்ளனா். இந்திய வம்சாவளியினா் அதிகம் வாழும் நாடுகளில் சா்வதேச அளவில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இரு நாடுகளிடையே நீண்டகால நட்புறவு, வரலாறு, கலாசாரம், நாகரிகரீதியாக நீண்ட வரலாற்றுத் தொடா்புகள் உள்ளன. இரு நாடுகளின் தலைவா்களும் சந்தித்துப் பேசுவதன் மூலம் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் தொடா்ந்து இணைந்து செயல்படுவதற்கு உதவும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.