கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பிரதமர் மீதான தாக்குதல் ஜனநாயக மரபுகளையே கிழித்தெறியும்: ஓம் பிர்லா

மக்களவையில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாகத் தகவல்: அவைத் தலைவர் ஓம் பிர்லா

News image

பிரதமர் மோடி

பிடிஐ

Updated On :5 பிப்ரவரி 2026, 1:11 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மக்களவையில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்ததால்தான், அவைக்கு பிரதமரை வர வேண்டாம் என்று வலியுறுத்தியதாக ஓம் பிர்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "அவையில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, அவரின் இருக்கையை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் அடையலாம், எதிர்பாராத ஒன்றை முயற்சிக்கலாம் என்றும் உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது. இந்தக் காட்சியை அவையில்கூட பார்த்தேன்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

ஏதேனும் சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளையே கிழித்தெறியும் ஒரு விரும்பத்தகாததாக இருந்திருக்கும்.

இதனைத் தவிர்க்கவே, அவைக்கு பிரதமர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்" என்று கூறினார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வலியுறுத்தி, புதன்கிழமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜெனிபென் தாகூர், வர்ஷா கெய்க்வாட், ஜோதிமதி, ஆர். சுதா, கே. காவியா, ஷோபா பச்சாவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் சுமார் 9 பேர் பிரதமரின் இருக்கையை முற்றுகையுமிட்டனர். இதனையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமரின் பாதுகாப்புக்காக அவை ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், "பிரதமர் மீது யாரும் கைகளை உயர்த்துவதோ காயப்படுத்த முயற்சிப்பதோ என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படியொரு திட்டம் இருந்ததாகச் சொல்வது முற்றிலும் தவறு.

இப்போது, அவைத் தலைவருக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவைக்கு வர தைரியமில்லாததால், அவைத் தலைவரை இப்படியெல்லாம் சொல்ல வைக்கின்றனர்" என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.