சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் உத்தம் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிஜப்பூரில், காடுகள் நிறைந்த மலைப்பகுதியில், இன்று (பிப். 5) மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் உத்தம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வனப் பகுதியினுள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 7 மணி முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உத்தம் சிங் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வரும் உத்தம் சிங் தெற்கு பஸ்தர் பிரிவில் உள்ள 30 ஆவது பிளாட்டூனுக்கு தலைமை வகித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரைப் பிடிக்க ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட உத்தம் சிங்கிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
In Chhattisgarh, senior Maoist leader Uttam Singh was shot dead.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜார்க்கண்டில் 27 மாவோயிஸ்டுகள் சரண்!
ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்! திருமாவளவன் பேரம் பேசுகிறார்! தமிழிசை

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




