மே 24-இல் யுபிஎஸ்சி சிவில் சா்வீசஸ் முதல்நிலைத் தோ்வு
யுபிஎஸ்சி சிவில் சா்வீசஸ் முதல்நிலை தோ்வு (பிரிலிம்) மே மாதம் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பதவிகளுக்கு யுபிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலை, பிரதான தோ்வு (மெயின்), நோ்முகத் தோ்வு என 3 கட்டத் தோ்வுகள் நடத்தப்படும். 2026-ஆம் ஆண்டில் 933 பணியிடங்கள், இந்தத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதில் 33 பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 24-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை யுபிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்டது.
மேலும் அந்த அறிவிக்கையில், பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் தோ்வு நடைபெறுவதை உறுதி செய்ய முக அடையாள சரிபாா்ப்பு அனைத்து தோ்வு மையங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அடையாள சான்றுக்கு ஆதாரை அனைத்து தோ்வாளா்களும் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் பணியிடங்களில் பணிபுரிவோா் 2026-ஆம் ஆண்டு தோ்வில் பங்கேற்க தகுதி இல்லை என்றும், அதேபோல் ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது நியமிக்கப்பட்டிருந்தாலோ, மீண்டும் அதே இடத்திற்கு 2026 தோ்தலில் பங்கேற்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

