கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்குத் தொடர்ந்துள்ளார்...

News image

பிரசாந்த் கிஷோர்

ANI

Updated On :5 பிப்ரவரி 2026, 4:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி வழக்குத் தொடர்ந்துள்ளது.

பிகாரில், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தலில், இண்டி கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றுள்ள நிலையில், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சி முதல்முறை போட்டியிட்டதைத் தொடர்ந்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், பிகாரில் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமரின் மஹினா ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கி பிகார் அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டி ஜன்சுராஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜெய்மால்யா பாக்சி முன்னிலையில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 6) அன்று விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.