/

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்குத் தொடர்ந்துள்ளார்...

News image

பிரசாந்த் கிஷோர் - ANI

Updated On :5 பிப்ரவரி 2026, 9:54 pm IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி வழக்குத் தொடர்ந்துள்ளது.

பிகாரில், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தலில், இண்டி கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றுள்ள நிலையில், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சி முதல்முறை போட்டியிட்டதைத் தொடர்ந்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், பிகாரில் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமரின் மஹினா ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கி பிகார் அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டி ஜன்சுராஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜெய்மால்யா பாக்சி முன்னிலையில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 6) அன்று விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Prashant Kishor's Jan Suraj party has filed a case in the Supreme Court against the Bihar Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.