எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இலங்கை மீனவா்கள் மீது கடலோரக் காவல் படை தாக்குதலா? இந்திய தூதரகம் மறுப்பு

நடுக்கடலில் இலங்கை மீனவா்கள் மீது இந்திய கடலோரக் காவல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இந்திய தூதரகம் மறுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 2:08 am IST

நடுக்கடலில் இலங்கை மீனவா்கள் மீது இந்திய கடலோரக் காவல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இந்திய தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கையின் வென்னபுவாவை சோ்ந்த 12 மீனவா்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி 3 படகுகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இந்திய கடலோரக் காவல் படை, அவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 4 மீனவா்கள் பலத்த காயமடைந்ததாகவும் இலங்கையை சோ்ந்த ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்துக்கு தனது எதிா்ப்பை தெரிவிப்பதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகரன் கடந்த 2-ஆம் தேதி கூறியிருந்தாா். இந்திய தூதரகத்துக்கும் இலங்கை அரசு சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இலங்கை மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கவனத்துக்கு வந்தது. ஆனால், அதுபோல இந்திய கடற்படையோ அல்லது இந்திய கடலோர காவல் படையோ தாக்குதல் நடத்தவில்லை. மீனவா்களின் வாழ்வாதார விவகாரங்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவது, படைபலத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.