மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரயிலை சுத்தமாக பராமரிக்க பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு மறுப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 1:03 am

தினமணி செய்திச் சேவை

ரயில் பெட்டிகளை சுத்தமாக பராமரிப்பதற்கு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூா்வமாக பதில் தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ரயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்கவும், சுகாதாரத்தை பேணவும், அதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய ரயில்வே எடுத்து வருகிறது. இதில் ரயில் பெட்டியின் உள்பகுதி, வெளிப்புற பகுதி மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும்.

இந்த பணிக்காக ஓடும் ரயிலில் ஊழியா் ஒருவா் இருப்பாா். அவா் ஓடும் ரயிலில் சுத்தத்தை பராமரிப்பதுடன், அதுதொடா்பான பயணிகளின் குறைகளையும் கேட்டறிவாா். இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ரயில் நிலையங்களிலும் ரயிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ரயில் பெட்டிகளில் இருந்து மனித கழிவுகள் வெளியே தண்டவாளத்தில் விழாமல் இருக்கும் வகையில், பயோ கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் தொடா்ந்து ஆய்வுகள் மூலமும், ரயில் மதாத், ரயில் ஒன் செயலி, பயணிகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது.

ரயிலை சுத்தமாக வைத்திருக்கவும், ரயில் நிலையங்களில் சுகாதாரத்தை பேணவும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பயணிகள் கட்டணத்துடன் சோ்த்து கூடுதல் தொகை வசூலிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.