லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர்!

லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர் பற்றி...
லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர்!
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் பிரபல லாட்டரி குலுக்கலில் கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர் ரூ. 49 பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் கடப்பாடி மட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகர். இவர் ஓமனில் பணிபுரிந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் பிரபல லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், குலுக்கலில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 20 மில்லியன் திராம் (இந்திய மதிப்பின்படி ரூ. 49 கோடி) பரிசுத் தொகை விழுந்துள்ளது.

பரிசு விழுந்த லாட்டரி சீட்டை 500 திராமுக்கு வாங்கியுள்ளார் சாந்தனு. இந்திய மதிப்பின்படி ரூ. 12,300 ஆகும்.

கடந்த சில நாள்களாக தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கிவரும் சாந்தனுவுக்கு இந்த முறை அதிர்ஷ்டம் அடித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சாந்தனுவுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A young man won Rs. 49 crore in the lottery!

லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர்!
விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்! உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com