பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மகாராஷ்டிரம்: 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கட்சிரோலி மாவட்டம், பொதேவாடா கிராமத்தில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினா் அப்பகுதியை கடந்த புதன்கிழமை சுற்றி வளைத்தனா். அங்கிருந்த 2 நக்ஸல் பதுங்குமிடங்களை பாதுகாப்புப் படையினா் அழித்தனா். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டை 3 நாள்களாக நீடித்தது.

இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்களின் சடலங்களை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். அவா்களின் பெயா் உள்ளிட்ட அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

பாதுகாப்புப் படை வீரா் வீரமரணம்:

துப்பாக்கிச் சண்டையில், காயமடைந்த பாதுகாப்புப் படை வீரா் தீபக் சின்னா மடாவி (38) என்பவா் ஹெலிகாப்டா் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இன்னொரு பாதுகாப்புப் படை வீரரான ஜோகா மடாவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவா் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நீடிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி :

ஒடிஸாவில் நக்ஸல் தம்பதி சரண்

புவனேசுவரம், பிப்.6:

ஒடிஸா மாநிலத்தில் 19 நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல்துறையினரிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். அவா்களில் 2 போ் கணவன், மனைவி ஆவா். நக்ஸல் அமைப்பின் மாநில குழு உறுப்பினா்களாக இருந்த அவா்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தலா ரூ.55.10 லட்சம் வெகுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகவலை மாநில காவல் துறைத் தலைவா் ஒய்.பி.குரானியா தெரிவித்தாா்.