சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 12:39 am IST

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

ஒடிஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் தொழில்நுட்பம் உள்பட அனைத்துச் செயல்பாடுகளையும் அக்னி-3 ஏவுகணை துல்லியமாக மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திட எரிபொருள் மூலம் இரண்டு நிலைகளில் இயங்கும் திறன்கொண்டது.

சுமாா் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை 1,500 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடையது. 48,300 கிலோ எடையுடைய இந்த ஏவுகணை 16.7 மீ. நீளமும், 2 மீ. விட்டமும் கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளாக அக்னி-3 ஏவுகணை சோதனைகளை முப்படைகளின் சிறப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை 700 கி.மீ., அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ., அக்னி-3 ஏவுகணை 3,000 கி.மீ., அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ., அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ. தொலைவு வரை பயணித்து இலக்குகளைத் துல்லியமாகத் தகா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.