பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 12:39 am IST

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

ஒடிஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் தொழில்நுட்பம் உள்பட அனைத்துச் செயல்பாடுகளையும் அக்னி-3 ஏவுகணை துல்லியமாக மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திட எரிபொருள் மூலம் இரண்டு நிலைகளில் இயங்கும் திறன்கொண்டது.

சுமாா் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை 1,500 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடையது. 48,300 கிலோ எடையுடைய இந்த ஏவுகணை 16.7 மீ. நீளமும், 2 மீ. விட்டமும் கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளாக அக்னி-3 ஏவுகணை சோதனைகளை முப்படைகளின் சிறப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை 700 கி.மீ., அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ., அக்னி-3 ஏவுகணை 3,000 கி.மீ., அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ., அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ. தொலைவு வரை பயணித்து இலக்குகளைத் துல்லியமாகத் தகா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.