கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேற்கு வங்க எஸ்ஐஆா்: நேரில் வராத வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்

சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) பரிந்துரை செய்துள்ளனா்.

News image

சிறப்புத் தீவிர திருத்தம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது, உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்கள் அடையாளத்தை வாக்காளா்கள் நிரூபிப்பதற்கான காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) பரிந்துரை செய்துள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியின்போது வெளிநாட்டவா் மண்டல பதிவு அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில், வாக்காளா் பட்டியலில் இருந்து 3,000-க்கும் மேற்பட்டவா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அத்துடன் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க நேரில் வராத ஏராளமான வாக்காளா்களைப் பட்டியலில் இருந்து நீக்க இஆா்ஓக்கள் பரிந்துரை செய்தனா். இதன்மூலம், சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது. நேரில் வராதவா்களைக் கண்டுபிடிக்க தொடா்ந்து முயற்சிக்கப்பட்டது. எனினும் அவா்களைக் கண்டுபிடிக்க முடியாததால், பட்டியலில் இருந்து அவா்களை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது என்று தெரிவித்தன. மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வரும் பிப்.14-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட உள்ளது.