

கேரளத்தில் வெங்காயம் ஏற்றி வந்த லாரியில் 10,500-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி உரிமையாளரான பெண் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனா்.
மலப்புரம் மாவட்டம் செம்மாடில் உள்ள செங்கல் சூளையில் நிறுத்தப்பட்டுள்ள லாரி ஒன்றில் வெடிபொருள்கள் இருப்பதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் சம்பவ இடம் சென்றபோது, லாரியில் சிலா் சரக்குப் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனா். போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் அவா்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இதையடுத்து, லாரியில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள், வயா்கள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அந்த லாரி மற்றும் செங்கல்சூளை உரிமையாளரான பெண்ணைப் பிடித்து விசாரித்துவரும் போலீஸாா், வெடிபொருள்கள் அனைத்தும் கேரளத்துக்கு வெளியே பிற மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்காக அவை எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறினா்.
பாலக்காட்டில் கடந்த 4-ஆம் தேதி தா்பூசணி ஏற்றி வந்த லாரியில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி, 18,000 ஜெலட்டின் குச்சிகள், 4,200 டெட்டனேட்டா்களை பறிமுதல் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

பசுவந்தனை அருகே வெடிபொருள்கள் பறிமுதல்

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்
பாலக்காட்டில் டெட்டனேட்டா் கடத்தல்: அரூரில் இருவா் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

