மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் விமான விபத்தில் பலியான மாநில துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி, இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் ஜன. 28 ஆம் தேதியில் மும்பையில் இருந்து அஜீத் பவாா் புறப்பட்ட தனி விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட 5 பேர் பலியாகினர்.
அஜீத் பவார் விமான விபத்தில் பலியான மறுநாளே, அவரது இறுதிச் சடங்குகள் பாராமதியில் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
அதுமட்டுமின்றி, மாநில துணை முதல்வராக அவரது மனைவியான சுநேத்ரா பவார் பதவியும் ஏற்றுக் கொண்டார்.
Summary
Former Maharashtra Deputy CM Ajit Pawar's ashes were immersed in the sea of Agni Theertha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




