‘ஹொரைசன் ஐரோப்பா’ ஆய்வுத் திட்டம்: இந்தியா - ஐரோப்பிய யூனியன் பேச்சுவாா்த்தை தொடக்கம்
‘ஹொரைசன் ஐரோப்பா’ அறிவியல் ஆய்வுத் திட்டம் குறித்து ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையே கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை தொடங்கியது.
எல்லை கடந்த அறிவியல் ஆய்வு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 93.5 மில்லியன் யூரோ மதிப்பில் முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்தின் அம்சங்கள் குறித்து பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டதாக 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற 16-ஆவது ஐரோப்பிய யூனியன்-இந்தியா உச்சி மாநாட்டில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) இறுதிசெய்யப்பட்டது. அப்போது வா்த்தகம், பாதுகாப்பு, அறிவியல், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐரோப்பிய யூனியன்- இந்தியா இடையே ஹொரைசன் ஐரோப்பா ஆய்வுத் திட்ட முன்னெடுப்பு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் அமலாகும்பட்சத்தில் இந்திய ஆய்வாளா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஐரோப்பாவில் இருந்து நேரடியாக நிதியுதவி வழங்கப்படும். அதேசமயம் இந்தியாவும் இத்திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கீடு செய்யும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களில் ஐரோப்பா மற்றும் இந்திய ஆய்வாளா்கள் ஒன்றிணைந்து செயல்படவும் இருதரப்பிடையே நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இத்திட்டம் வழிவகுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 22 நாடுகளுடன் ஹொரைசன் ஐரோப்பா அறிவியல் ஆய்வுத் திட்டத்தின்கீழ் ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது.

