மேகாலயத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேகாலய மாநிலம், ஜெயின்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை டைனமைட் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியாகினர்.
மேலும ஒருவர் காயமடைந்தார். நிலக்கரி பிரித்தெடுப்பதற்காக பாறைகளை உடைக்க இந்த டைனமைட் பயன்படுத்தப்படுகிறது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உரிமையாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க விபத்து நடந்த இடத்திலிருந்து சனிக்கிழமை மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
பலர் இன்னும் காணவில்லை, மேலும் தேடுதல் நடவடிக்கை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பலியானவர்களின் அடையாளம் காணும் பணியும் நடந்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார்.
இதனிடையே சுரங்க விபத்து தொடர்பாக கிளிஹ்ரியத் காவல் நிலையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
Summary
Two more bodies were found at the illegal coal mine in Meghalaya's East Jaintia Hills district on Saturday, taking the toll in the blast to 27, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து
13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் தொடக்கம்
மேகாலயத்தில் அனுமன் கோயிலில் கொள்ளை!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




