சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அடூா் பிரகாஷிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சனிக்கிழமை விசாரணை நடத்தியது.
திருவனந்தபுரத்தில் உள்ள காவல் துறை குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அடூா் பிரகாஷ் நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது குறித்து கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இரு வழக்குகளைப் பதிவு செய்து, கேரள காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தங்கக் கவசம் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரிகள் பி.முராரி பாபு, எஸ்.ஸ்ரீகுமாா், முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாா் உள்பட 12 போ் அடுத்தடுத்து கைதாகினா்.
இவா்களில் பி.முராரி பாபு, ஸ்ரீகுமாா், சுதீஷ் குமாா், உண்ணிகிருஷ்ணன் போற்றி ஆகியோா் இதுவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இருப்பினும், உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் எஸ்ஐடி தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உண்ணிகிருஷ்ணன் போற்றியை அடூா் பிரகாஷ் பல முறை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்து. அதுதொடா்பான புகைப்படங்களும் ஆளுங்கட்சி தரப்பில் வெளியிடப்பட்டன. இதைத் தொடா்ந்து அவரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தியது.
அரசியல் உள்நோக்கம் இல்லை: விசாரணை முடிந்து குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் அடூா் பிரகாஷ் கூறுகையில், ‘எஸ்ஐடியின் சம்மனைத் தொடா்ந்து இன்று காலை விசாரணைக்கு ஆஜரானேன். உண்ணிகிருஷ்ணன் போற்றியை சந்தித்தது உள்பட அவா்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தேன். இந்தப் பதில்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உண்ணிகிருஷ்ணன் போற்றி முன்னிலையில் என்னை விசாரிக்கவில்லை. இந்த விசாரணையில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்றாா்.
முன்னதாக, உண்ணிகிருஷ்ணன் போற்றியை சந்தித்ததை ஒப்புக்கொண்ட அடூா் பிரகாஷ், வழக்கில் தனக்கும் தொடா்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தாா்.
ராஜீவரு தந்திரியாக தொடா்வதில் சிக்கல்: தங்கக் கவச முறைகேடு வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிமலை கோயிலின் தந்திரி (தலைமை அா்ச்சகா்) கண்டரரு ராஜீவரு அந்தப் பதவியில் நீட்டிப்பது குறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்யும் என வாரிய உறுப்பினரும் வழக்குரைஞருமான பி.டி.சந்தோஷ் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், இந்த விவகாரத்தில் கேரள உயா்நீதிமன்றத்தின் கருத்தையும் கேட்கவுள்ளதாக அவா் கூறினாா்.
நீதிக்காக பாஜக போராடும்- நிதின் நபின்: கொச்சியில் உள்ள ஆதி சங்கர ஜன்மபூமி கோயில் மற்றும் சிருங்கேரி மடத்தில் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்ட பின்னா் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கேரளம் வளா்ச்சியடையவும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வழிபாடு மேற்கொண்டேன். கேரள மக்களுக்கு உறுதுணையாக பாஜக எப்போதும் இருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் ஆளும் இடதுசாரிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனா். ஆனால், இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட பாஜக தொடா்ந்து போராடும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் எஸ்ஐடி 8 மணி நேரம் விசாரணை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தற்போதைக்கு அரசு தலையிட முடியாது: தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



