புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மே. வங்கத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர் தாக்கியதில் முதியவர் பலி? குடும்பத்தினர் புகார்!

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாக்கியதில் முதியவர் இறந்ததாகக் குற்றச்சாட்டு...

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 3:03 pm

ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் முதியவரைத் தாக்கியதில் அவர் இறந்ததாகக் குற்றஞ்சாட்டி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தின் நார்த் 24 பார்கனாஸ் மாவட்டத்தில் முதியவர் துளசி அதிகாரி என்பவருடன் வடக்கு பாரக்பூர் நகராட்சி வார்டு 23-இன் கவுன்சிலர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரபீந்திர நாத் பட்டாசார்யாவுக்கு ஏற்பட்ட தகராறில் கவுன்சிலர் தாக்கியதால் அந்த நபர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

துளசி அதிகாரியின் வீட்டின் முன் சட்ட விரோத கட்டுமானப் பணிகள் நடைபெற்றதாக அவர் குற்றம்சாட்டி வந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சனிக்கிழமை(பிப். 7) சென்ற பட்டாசார்யாவுக்கும் துளசி அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரத்தில், அதிகாரியையும் அவரது மகனையும் கையால் குத்தியதுடன் அவரைத் தமது காலால் மிதித்து ரபீந்திர நாத் துன்புறுத்தியதாக அதிகாரியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதில், நிலை தடுமாறி மயங்கி விழுந்த அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் அந்தக் கவுன்சிலர் மீது போலீசிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து போலீசார் ரபீந்திர நாத் பட்டாசார்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

An elderly man died in West Bengal's North 24 Parganas district after being allegedly assaulted by a TMC councillor for protesting illegal construction, his family alleged in a police complaint on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.