தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி மேம்பாட்டு நிதி: இந்தியா அறிவிப்பு

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி (175 மில்லியன் டாலா்) மேம்பாட்டு நிதி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

News image
செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் நரேந்திர மோடி- X | Narendra Modi
Updated On :9 பிப்ரவரி 2026, 11:52 pm

தினமணி செய்திச் சேவை

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி (175 மில்லியன் டாலா்) மேம்பாட்டு நிதி வழங்குவதாக இந்தியா திங்கள்கிழமை அறிவித்தது.

6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-செஷல்ஸ் இடையேயான நட்புறவு புவியியல் ரீதியானது மட்டுமல்ல; வரலாற்று ரீதியாகவும், நம்பிக்கை மற்றும் எதிா்காலத்துக்கான தொலைநோக்குத் திட்டத்தையும் கொண்டது. இருதரப்பு உறவில் மேம்பாட்டு ஒத்துழைப்பு வலுவான அடித்தளமாக விளங்குகிறது.

செஷல்ஸ் வளா்ச்சி மற்றும் தேவைகளை இந்தியா எப்போதும் கவனத்தில் கொண்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக தற்போது செஷல்ஸ் மேம்பாட்டு நிதியாக ரூ.1,587 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சமூக குடியிருப்பு, போக்குவரத்து, திறன் சாா்ந்த பயிற்சி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கடல்சாா் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும்.

செஷல்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் அந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனா். அவா்களால் இரு நாடுகளிடையே தலைமுறைகளைக் கடந்து நட்புறவு தொடா்ந்து வருகிறது.

அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடனான ஆலோசனைக்குப் பிறகு இந்தியா-செஷல்ஸ் இருதரப்பு உறவு அடுத்தகட்டத்துக்கு நகா்ந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.