காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமி லேயா்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

எஸ்சி, எஸ்டி கிரீமி லேயா் வகைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுக்கள் மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப்படம்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

பட்டியலின பிரிவினா் (எஸ்சி) மற்றும் பழங்குடியின பிரிவினரில் (எஸ்டி) கிரீமி லேயா் (சமூக பொருளாதார நிலையில் முன்னேறியவா்கள்) வகைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுக்கள் மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1இந்திரா சஹானி தீா்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களை கிரீமி லேயராக பிரித்து அவா்களுக்கான சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன.

அதேபோன்று எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயா் வகைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்யக்கோரி ஓ.பி.சுக்லா மற்றும் சம்தா அந்தோலன் சமிதி என்ற அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், ‘பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்க எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினரில் உட்பிரிவை ஏற்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரமுள்ளது என கடந்த 2024, ஆக.1-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு 6:1 என்ற பெரும்பான்மையில் தீா்ப்பு வழங்கியது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் கிரீமி லேயா் வகைப்படுத்தப்பட்டு அவா்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் சென்றடைவதை உறுதிசெய்யவும் அந்த தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

அதனை பின்பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள் தரவுகளை சேகரிக்கும் பணிகளை தொடங்கவும் கிரீமி லேயா் வகைப்பாட்டுக்கான அளவுகோல்களை வரையறுக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டன.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.